akshaya tritiya 2018 | அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கணுமா? வெள்ளி வாங்கணுமா? எது நல்லது!


Source: https://www.youtube.com/watch?v=WsfNmNXpaco

2018 Aiswarya kolam kubera lakshmi kadaksham/Akshaya tritiya Pooja kolam/Aathukolam by Preetha SaiRam


Source: https://www.youtube.com/watch?v=Gn7l27aYDlQ

Special Live Show for Akshaya Tritiya 2018 with Famous Astrologer Shelvi




Source: https://www.youtube.com/watch?v=Qolvce2GGA0

அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் செய்யலாம்!?


அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம் ?


அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம். ஏனென்றால் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.

என்னென்ன பொருட்களைத் தானம் தரலாம்?

ஒரே இடத்தில் செல்வம் குவிந்திருப்பதை இறைவன் விரும்புவதில்லை. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள். ஒரு கையளவு நெல் பல மூட்டை அரிசியை உருவாக்க முடியும் . அதே போல நாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும்.

வெப்பத்தைத் தணிக்கும் வகையில் உடுக்க உடை,  குடை, பானகம், நீர் மோர், விசிறி போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம்.

குறிப்பாகத் தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வம் பெறலாம்.

நோயால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ உதவியும், கிழிந்த ஆடை அணிந்தவர்களுக்கு நல்ல ஆடையையும் அளிக்கலாம்.

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும்.

இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும்.

அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.

அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும்.
கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.


அட்சய திரிதியையும் பித்ருக்கள் காரியமும்...

இன்றைய நாளில் பித்ருக்கள் காரியம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும். தவிர, அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த பின், பசுக்களுக்கு வாழைப் பழம் கொடுப்பது சிறப்பு. அட்சய திரிதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.

கிராமத்தில் இருந்த வியாபாரி ஒருவன், அட்சய திரிதியை அன்று கங்கையில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, ஏழை மக்களுக்குத் தானியங்களை தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அடுத்தப் பிறவியில் ராஜ யோகம் பெற்றார். அரசனான பிறகும் அட்சய திரிதியையில் முற்பிறவியில் செய்த புண்ணிய காரியங்களைச் செய்ததால், வைகுண்டம் அடைந்தார். எனவே அமாவாசை அன்று திதி கொடுக்காதவர்கள் கூட அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில்  செய்யக்கூடிய காரியங்கள்.

குழந்தைக்கு அன்னப் பிராசனம்

சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது.

சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம்,  தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.

நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.

வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ளலாம்.

Source: Vikatan.com

'அட்சயம்' எனும் வார்த்தை... குசேலரின் குடிசை மாளிகையான கதை!


அட்சய திரிதியை வந்துவிட்டது ஒரு குண்டு மணியளவாவது தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் நகைக்கடைகளுக்கு அலைமோதுகின்றனர்.  காரணம் லட்சுமி தேவி குடியிருக்கும் தங்கத்தை வாங்கினால், வீட்டுக்கு லட்சுமியே வருவாள் என்பதுதான் அவர்களது நம்பிக்கை. லட்சுமி தேவி குடியிருப்பது தங்கத்தில் மட்டுமல்ல உப்பு, அரிசி (அட்சயம்) போன்ற உணவுகளிலும்தான். அட்சய பாத்திரம் போல, அள்ள அள்ளச் செல்வம் பெருக அன்றைய தினத்தில் எளியவர்களுக்கு தானம் செய்வது மிகவும் அவசியம்.தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.

akshaya tritiya in 2018
புராணங்களில் அட்சய திரிதியை மகத்துவத்தை உணர்த்தும் பல கதைகள் உண்டு.
ஒரு முறை கண்ணனைக் காணவேண்டும் என அவரது சிறுவயது நண்பனான குசேலர் விரும்பினார். ஏழ்மையில் வாடிய குசேலர் ஒரு பிடி அவலை தன் கிழிந்த மேலாடையில் முடிந்துகொண்டு கண்ணனைக் காண அவலுடன் சென்றார். போகும் வழியெல்லாம் தன் ஏழ்மை நிலைக்கு நல்ல வழி காட்டும்படி கண்ணனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே சென்றார். ஆனால் கண்ணனைக் கண்டதும் அவருக்கு உதவிக் கேட்க மனம் வரவில்லை. கண்ணனும் குசேலருக்கு ராஜ உபசாரம் செய்தார். பின்பு தன் நண்பன் கொண்டுவந்த அவலைச் சாப்பிட்டபடி, "அட்சயம்" என்றார். உடனே, குசேலரின் குடிசை மாளிகை ஆனது. குசேலர் "குபேர சம்பத்து" பெற்றார். குசேலருக்கு கண்ணபிரான் அருள் புரிந்த நாள் "அட்சய திரிதியை" நாளாகும்.

ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது முதன்முதலாக தங்கள் வயிற்றுப்பசியை உணர்ந்தனர். அப்போது பகவான் கிருஷ்ணன், அவர்கள் முன்பு தோன்றி உணவளித்தார். பின்பு அள்ள அள்ளக் குறையாது உணவளிக்கும் அட்சய பாத்திரத்தைப் பெறுவதற்கான வழியைப் பஞ்ச பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் கூறினார்.
ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்குச் சூரிய உபாசனை செய்யும் "ஆதித்ய ஹ்ருதய" மந்திரத்தை உபதேசித்தார் அகத்திய முனிவர்.  மகா பாரதத்தில், பஞ்ச பாண்டவர்கள் அந்த ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை  உச்சரித்து கடுந்தவம் புரிந்தனர். தவத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்து சூரியபகவான் அவர்கள் முன்பு தோன்றி , அட்சய பாத்திரத்தை அளித்தார். ஆனால்  அட்சய பாத்திரத்தை அன்னத்தாலோ, வேறு உணவு பதார்த்தங்களாலோ நிரப்பினால், அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அது உணவளிக்கும். ஒருவேளை உணவருந்தியபின் எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து, அட்சயப் பாத்திரத்தைக் கழுவிவைத்துவிட்டால், மறுநாள் சூரியோதயத்துக்கு பிறகுதான் அது மீண்டும் உணவளிக்கும். இந்த நியதிகளை விளக்கிவிட்டு மறைந்தார் சூரிய பகவான்.

நாட்டில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த துரியோதனனோ பாண்டவர்களை அழிக்கும் எண்ணத்தில் மூழ்கியிருந்தான். அந்தச் சமயம் மிகவும் சக்தி வாய்ந்த, துர்வாச முனிவர் துரியோதனனின் அரண்மனைக்கு வந்தார். அவரை அவமதித்தால் சாபம் தந்துவிடுவார் என்று முன்பே அறிந்திருந்த துரியோதனன் அவருக்கு, விருந்தும் தகுந்த மரியாதையையும் அளித்தான். தன்னை கௌரவப் படுத்திய துரியோதனனிடம் "என்ன வரம் வேண்டும் ?"என்று கேட்டார். காட்டில் இருக்கும் பஞ்ச பாண்டவர்கள் கஷ்டப்படும் இந்த வேளையில் இவரை அங்கு அனுப்பி வைத்தால் இவருக்கு விருந்தளிக்கமுடியாமல் சாபத்துக்கு உள்ளாவார்கள். என்ற தீய எண்ணத்தோடு, "மகரிஷியே, எங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்கள் ஆசீர்வாதமே போதும். இதே போல காட்டில் இருக்கும் பஞ்ச பாண்டவர்களிடம் சென்று உணவருந்திவிட்டு அவர்களையும் வாழ்த்துங்கள்" என்றான் .

அப்படியே ஆகட்டும் என்று முனிவரும் பஞ்ச பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று, "எனக்கு மிகுந்த பசி, நான் சென்று ஆற்றில் குளித்துவிட்டு வருகின்றேன், உணவைத் தயார் செய்யுங்கள்" என்று கூறிவிட்டு ஆற்றங்கரைக்குச் சென்றார்.ஆனால் அப்போதுதான் பாண்டவர்கள் பகல் பொழுது உணவை முடித்து விட்டிருந்தனர். திரௌபதி அட்சயப் பாத்திரத்தைக் கழுவும் முன்பு சூர்யார்ப்பண மந்திரத்தையும் சொல்லிவிட்டாள். செய்வதறியாது தங்களைக் காக்கும்படி பகவான் கிருஷ்ணனை அழைத்தனர்.கிருஷ்ணனும் அட்சய பாத்திரத்தில் ஓர் அன்னப்பருக்கையும், கீரை இலையும் ஒட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார். அந்த அன்னப்பருக்கையை எடுத்து நாக்கில் வைத்து விழுங்கினார். 'அட்சயம்’ என்றும் கூறினார்.

என்ன ஆச்சர்யம், நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாசருக்கும், அவரின் சீடர்களுக்கும் பத்து நாள் உணவை ஒரே நாளில் சாப்பிட்டது போல் வயிறு கனத்தது. பஞ்ச பாண்டவர்களிடம் சென்று, "இப்போது என் வயிறு கனக்கிறது. என் சீடர்களும் அப்படியே உணர்ந்து கூறினார்கள். எங்களை மன்னித்துவிடு. உனக்குச் சர்வ மங்கலமும் உண்டாகட்டும்'' என்று வாழ்த்தி, தமது சீடர்களுடன் சென்றார்.
அட்சயம் என்னும் இந்த ஒரு வார்த்தைக்கு எத்தனை மகிமை என்று பார்த்தீர்களா ..?

ஆக அட்சய திரிதியை அன்று, தானம் தருமங்கள் செய்து திருமகள் மட்டுமல்லாது திருமாலையும் சேர்த்து வணங்குவோமாக.

Source: http://www.vikatan.com/news/spirituality/87880-what-is-the-real-story-behind-akshaya-tritiya.html

Akshaya tritiya kolam 2018 for lakshmi pooja


 Source: https://www.youtube.com/watch?v=CnPc4CHLolU

Akshaya Tritiya Special 2018 | Best Devotional Mantras



Source: https://www.youtube.com/watch?v=0JlfhTrtq-Y